Tamilnadu
லாரி கடத்தல் விவகாரத்தில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்... கொலை திட்டம் அம்பலம் - பின்னணி என்ன?
பிரபல ரவுடியை கொலை செய்ய, பணத்திற்காக மணல் லாரி கடத்திய மூவரை போலிஸார் கைது செய்தனர்.
சென்னை மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாளையம் (54), இவர் சொந்தமாக மணல் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவுப் பணியை முடித்துவிட்டு தனது லாரியை தனது வீட்டின் ஓரமாக நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். பின்பு மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது தனது லாரி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் போலிஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலிஸார் போரூர் சுங்கச்சாவடி, செங்கல்பட்டு சுங்கச்சாவடி ஆகிய 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக பரமக்குடி, ராமநாதபுரத்தில் தலைமறைவாக இருந்த எண்ணூரை சேர்ந்த குட்டி மோகன் (33), அம்பத்தூரை சேர்ந்த பொன்முருகன் (50), சிலம்பரசன் (32) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், எண்ணுாரைச் சேர்ந்த பிரபல ரவுடி தனசேகருக்கு எதிராக மோகன் செயல்பட்டு வந்துள்ளார். இதனால், இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இதையடுத்து, தனசேகரனை தீர்த்துக்கட்ட பணம் தேவை என்பதால், லாரியை கடத்தியது தெரியவந்தது. லாரியை விற்கும் நேரத்தில் மூன்று பேரும் பிடிபட்டனர். லாரியை கடத்திய மோகன் மீது, வெடிகுண்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !
-
பெண்கள் குறித்து ஆபாச கருத்து : வழக்கை சந்திக்குமாறு பாஜக பிரமுகர் H ராஜாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம் !
-
3 நாட்களில் 3 சம்பவங்கள்... போதைப்பொருளின் தலைநகரம் என்று நிரூபிக்கும் குஜராத்... விவரம் என்ன?
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !
-
எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!