Tamilnadu
3ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. முதியவர் மீது பாய்ந்தது போக்சோ : பகீர் சம்பவம் !
திருவாரூர் மாவட்டம், குண்ணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். முதியவரான இவர் அதேபகுதியைச் சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் முதியவர் மீது திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து முதியவர் சண்முகசுந்தரத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை போலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சண்முகசுந்தரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் அவரை சிறையில் அடைத்தனர்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!