Tamilnadu
நிஜத்தில் ஒரு காதல் கோட்டை: ஃபேஸ்புக் காதலிக்காக உயிரை விட்ட இளைஞர் : கள்ளக்குறிச்சி அருகே நடந்தது என்ன?
ரிஷிவந்தியம் மேலத்தேனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (26), ஃபேஸ்புக் மூலம் பூமிகா என்ற பெண்ணுடன் பல நாட்களாக நட்புறவில் இருந்து வந்திருக்கிறார்.
காலப்போக்கில் இருவரும் காதல் வயப்பட்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில், திடீரென மணிகண்டனிடம் பூமிகா பேசாமல் இருந்திருக்கிறார். இதனால் தவித்துப்போன மணிகண்டன் பூமிகாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அவரது பாட்டி எடுத்து பேசியிருக்கிறார்.
அப்போது, இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்த பூமிகா அண்மையில் இறந்துவிட்டதாக பாட்டி கூறியதும் செய்வதறியாது மணிகண்டன் நிலைக்குலைந்து போனதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நேரில் கூட பார்த்திராத காதலி இதய நோயால் இறந்ததை அடுத்து சோகம் தாளாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்திருக்கிறார்.
இதனால் மயங்கிய மணிகண்டனை குடும்பத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அங்கு சிகிச்சையில் இருந்து வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். காதல் கோட்டை பட பாணியில் பார்க்கமலேயே காதலித்து வந்த நிலையில் பூமிகாவின் பிரிவை தாங்க முடியாமல் மணிகண்டனும் தற்கொலை செய்த நிகழ்வு அவரது சுற்றத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!