Tamilnadu
நிஜத்தில் ஒரு காதல் கோட்டை: ஃபேஸ்புக் காதலிக்காக உயிரை விட்ட இளைஞர் : கள்ளக்குறிச்சி அருகே நடந்தது என்ன?
ரிஷிவந்தியம் மேலத்தேனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (26), ஃபேஸ்புக் மூலம் பூமிகா என்ற பெண்ணுடன் பல நாட்களாக நட்புறவில் இருந்து வந்திருக்கிறார்.
காலப்போக்கில் இருவரும் காதல் வயப்பட்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில், திடீரென மணிகண்டனிடம் பூமிகா பேசாமல் இருந்திருக்கிறார். இதனால் தவித்துப்போன மணிகண்டன் பூமிகாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அவரது பாட்டி எடுத்து பேசியிருக்கிறார்.
அப்போது, இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்த பூமிகா அண்மையில் இறந்துவிட்டதாக பாட்டி கூறியதும் செய்வதறியாது மணிகண்டன் நிலைக்குலைந்து போனதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நேரில் கூட பார்த்திராத காதலி இதய நோயால் இறந்ததை அடுத்து சோகம் தாளாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்திருக்கிறார்.
இதனால் மயங்கிய மணிகண்டனை குடும்பத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அங்கு சிகிச்சையில் இருந்து வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். காதல் கோட்டை பட பாணியில் பார்க்கமலேயே காதலித்து வந்த நிலையில் பூமிகாவின் பிரிவை தாங்க முடியாமல் மணிகண்டனும் தற்கொலை செய்த நிகழ்வு அவரது சுற்றத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!