Tamilnadu
'பிரியாணியில கறி இல்ல'.. கடையை சூறையாடிய கும்பல்: கேஷியருக்கு பளார்!
சென்னை பெரியமேடு பகுதியில் பிரபலமான பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் திருவள்ளூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் அக்கடையில் கேஷியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ரபீக், சலீம், சண்முகம் ஆகிய மூன்று பேர் பார்சலில் பிரியாணி வாங்க கடைக்கு வந்துள்ளனர். மேலும் காசு கொடுத்து பிரியாணி வாங்கியுள்ளனர். அப்போது பார்சல் பிரியாணியில் கறி குறைவாக இருப்பதாக கூறி தகராறு செய்துள்ளனர்.
மேலும் கடையில் இருந்த விக்னேஷ் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் மூன்று பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இது குறித்து விக்னேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து ரபீகை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சலீம் மற்றும் சண்முகத்தை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!