Tamilnadu
பள்ளி மாணவி கடத்தல்.. வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ: நடந்தது என்ன?
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பிருதூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற வாலிபர் மாணவியை கடத்திச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, வாலிபரிடம் இருந்த மாணவியை போலிஸார் மீட்டனர். மேலும் வாலிபர் மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட மாணவியை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!