Tamilnadu

பள்ளி மாணவி கடத்தல்.. வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ: நடந்தது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பிருதூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற வாலிபர் மாணவியை கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, வாலிபரிடம் இருந்த மாணவியை போலிஸார் மீட்டனர். மேலும் வாலிபர் மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட மாணவியை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

Also Read: ’டான்ஸ் கத்துக்க கொரியா போறேன்’ - சென்னை சின்னமலையில் காத்திருந்த சிறுமி மீட்கப்பட்டது எப்படி?