Tamilnadu
60 ஆண்டுகள்.. 100 படங்கள்.. இடிந்து விழுந்தது காதலர்களுக்கு உதவிய பழைய துறைமுக பாலம் !
புதுச்சேரி கடற்கரை சாலையில் தற்போது காந்தி பீடம் அமைந்துள்ள இடத்தில், பிரெஞ்ச் ஆட்சி காலத்தில் துறைமுகம் கட்டப்பட்டது. பின்னர் சுதந்திரத்திற்கு பிறகு வம்பாகீரப்பாளையத்தில் இரண்டாவது முறையாக 1956ல் புதிய துறைமுக பாலம் அமைக்கப்பட்டு, ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்று வந்தது. காலப்போக்கில் துறைமுக கையாளும் பணி நிறுத்தப்பட்டதால் இது கடற்கரையை மெருகேற்றும் காட்சிப்பொருளானது.
புதுச்சேரி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் இந்த அழகிய பாலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. பல காதலர்களை சேர்ட்து வைத்ததாகவும் கூறப்படும் இந்த பாலம் கடந்த 1962ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில் பழைய துறைமுக பாலம், பலவீனம் அடைந்ததால் பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. இதனிடையே பாலத்தின் கீழ் பகுதியில் சிமென்ட் மற்றும் இரும்பினால் ஆன துாண்கள் கடல் அலை தாக்குதலால் நாளுக்கு நாள் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து வலுவிழந்தது.
அதனால், பாதுகாப்பு கருதி இந்த பாலத்தில் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று நள்ளிரவு கடல் சீற்றம் காரணமாக இந்த பாலத்தின் நடுப்பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. மேலும் மற்ற பகுதிகளும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!