Tamilnadu
நடுவீதியில் ரகளை.. போலிஸை கொடூரமாக தாக்கிய அண்ணன் - தம்பி : ‘காப்பு’ மாட்டி சிறையில் தள்ளிய காவல்துறை!
சென்னை ஆவடி அருகே உள்ள கொரட்டூர் சாலை அருகே ஆவடி காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2.45 மணியளவில் அவ்வழியாக காரில் வந்த இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்ததுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டதில், ரகளை செய்தது சியாமளா பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மகன்கள் தீபக் ராஜ் (வயது 21) , ஜீவத் ராஜ் (19) எனத் தெரியவந்தது.
முன்னதாக விசாரிக்கச் சென்ற காவலர் ஆகாஷ் பாபுவை அண்ணன் தம்பி இரண்டு பேரும் தாக்கியதாகக் தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு பேரையும் கைது செய்து புழல் சிறையில் போலிஸார் அடைத்துள்ளனர்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!