Tamilnadu
நடுவீதியில் ரகளை.. போலிஸை கொடூரமாக தாக்கிய அண்ணன் - தம்பி : ‘காப்பு’ மாட்டி சிறையில் தள்ளிய காவல்துறை!
சென்னை ஆவடி அருகே உள்ள கொரட்டூர் சாலை அருகே ஆவடி காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2.45 மணியளவில் அவ்வழியாக காரில் வந்த இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்ததுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டதில், ரகளை செய்தது சியாமளா பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மகன்கள் தீபக் ராஜ் (வயது 21) , ஜீவத் ராஜ் (19) எனத் தெரியவந்தது.
முன்னதாக விசாரிக்கச் சென்ற காவலர் ஆகாஷ் பாபுவை அண்ணன் தம்பி இரண்டு பேரும் தாக்கியதாகக் தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு பேரையும் கைது செய்து புழல் சிறையில் போலிஸார் அடைத்துள்ளனர்.
Also Read
-
மதத்தையடுத்து, இனத்தை குறிவைக்கும் மோடி! : எதிர்க்கட்சிகள் கண்டனம்!
-
ராகுல் காந்தி கேள்விக்கு 24 மணி நேரமாக மவுனம் காப்பது ஏன்? : மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி!
-
ஏழைகளின் உயிர் காத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!
-
தடுப்பூசி விவகாரம் - சொந்தநாட்டு மக்களின் உயிரை பணயம் வைத்த பா.ஜ.க : அகிலேஷ் குற்றச்சாட்டு!
-
தொடரும் மோசடி - ”நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு” : தி.மு.க MP பி.வில்சன் வலியுறுத்தல்!