Tamilnadu
“இரண்டாவது மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர்” : சென்னையில் ‘பகீர்’ சம்பவம் - காரணம் என்ன?
சென்னை புழல் எம்.ஜி.ஆர் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (31). இவர் எலெக்ட்ரிசியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலா வயது 25 என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில வருடங்களுக்கு முன்பு மனைவி, பிள்ளைகளுடன் இவரை விட்டு பிரிந்து சென்றார்.
இந்நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த வெண்ணிலா (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன் மனைவியாக புழல் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தனர்.
இன்று மதியம் 3 மணி அளவில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வெண்ணிலாவின் கழுத்தை அறுத்துவிட்டு இளங்கோவன் போலிஸில் சரணடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார் வெண்ணிலாவை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து போலிஸார் விசாரனையில், வெண்ணிலாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளதால் அந்த குழந்தைகளை பார்ப்பது சம்பந்தமாக இளங்கோவனிடம் வெண்ணிலா தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளங்கோவன் வெண்ணிலாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து புழல் போலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!