Tamilnadu
”EPS, OPS-ஐயே தெரியும்; அரசு வேலை கன்ஃபார்ம்” - ₹7 லட்சத்தை சுருட்டி தலைமறைவான அதிமுக பிரமுகருக்கு வலை!
அரசு வேலை வாங்கி தருவதாக 7 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய அ.தி.மு.க பிரமுகர் மீது திருவள்ளூர் போலிஸிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் லயன் ரமேஷ். இவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது நண்பர் என கூறி கடம்பத்தூர் அடுத்த செஞ்சி பணம்பக்கம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் ஊராட்சி செயலாளர் வேலை வாங்கி தருவதாக 4 லட்ச ரூபாய் பணத்தையும், தொழில் வணிகம் செய்யலாம் எனக் கூறி 3 லட்சம் பணத்தையும் பெற்றுக் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ் மோசடியில் ஈடுபட்டு வருவதாக அவர் மீது கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவர் மீது கடம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள அ.தி.மு.க பிரமுகர் ரமேஷை தேடி வருகின்றனர். ஏற்கெனவே அரசு வேலை வாங்கித் தருவதாக கடந்த மாதம் 23ஆம் தேதி ரமேஷ் மீது ஈஸ்வரன் என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!