Tamilnadu
ஓட்டு போடாததால் ஆத்திரம்.. பெண்ணை செருப்பால் அடித்த அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு: போலிஸ் வலைவீச்சு!
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சேவகன் தெருவைச் சேர்ந்தவர் சித்ரா தேவி. இவரது பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் செல்வராஜ். இவர் அப்பகுதியில் அ.தி.மு.க வட்டச் செயலாளராக உள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் செல்வராஜின் மனைவி வசந்தராணி அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து பக்கத்து வீட்டில் இருக்கும் சித்ரா தேவியின் வீட்டிற்குச் சென்ற செல்வராஜ் 'எனது மனைவிக்கு ஏன் ஓட்டுப்போடவில்லை' என கூறி மிரட்டியுள்ளார்.
பின்னர், கடந்த 24ம் தேதி கொல்லைக்குச் சென்ற கொண்டிருந்த சித்ரா தேவியை வழிமறித்த அவர், “ஏன் எங்கள் கொல்லை பாதை வழியாகச் செல்கிறாய்” எனக் கூறி அவரை செருப்பால் அடித்துள்ளார். பின்னர் அவரை கீழே தள்ளி கொடூரமாகத் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சித்ரா தேவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கறம்பக்குடி காவல்நிலையத்தில் 4 பிரிவுகளில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடிவருகின்றனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!