Tamilnadu

மக்களைத்தேடி மருத்துவம்: பயனாளியின் வீட்டுக்கே சென்று மருந்து பெட்டகம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் சித்தாலப்பாக்கத்தில், மருத்துவம் மற்றும் 108 அவசரகால ஊர்திகள் சேவையை மேலும் வலுப்படுத்த 69.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக 188 அவசரகால புதிய வாகனங்களின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தற்போது கூடுதலாக, 188 அவசரகால வாகனங்கள். இச்சேவையில் இணைக்கப்படுவதன் மூலம், அதிக பொதுமக்கள் பயனடைவதுடன், சேவைக்காக காத்திருக்கும் நேரமும், மருத்துவமனைக்கு சென்றடையும் கால அளவும் குறையும்.

முன்னதாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Also Read: ‘திராவிட மாடல்' ஆட்சியை, BJP ஆளும் உ.பி-யுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்: குறைசொல்வோருக்கு முரசொலி பதில்!