Tamilnadu

மகன் இறந்த துக்கம் தாங்காமல் விபரீத முடிவெடுத்த தம்பதி... நடந்தது என்ன?

கோவை மாவட்டம், கலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு ஷ்யாம் என்ற 15 வயது சிறுவன் இருந்தார்.

இந்நிலையில் சிறுவனுக்குக் கடந்த டிசம்பர் மாதம் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மகன் இறந்து துக்கம் தாங்க முடியாமல் தம்பதிகள் தவித்து வந்துள்ளனர்.

மேலும் உறவினர்களிடம் மகன் இறந்ததை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனக் கூறிவந்துள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் தம்பதிகள் வீடு பூட்டியே இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் வீட்டிற்குள் சென்றபோது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர்.

இதையடுத்து அவர்களது உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மகன் இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

Also Read: 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை.. அதிரடி உத்தரவு: எங்கு தெரியுமா?