Tamilnadu
அசைக்கமுடியாத வெற்றியை பதிவு செய்து ராஜபாளையம் நகராட்சியை கைப்பற்றியது தி.மு.க.. முழு விபரம்!
விருதுநகர் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராஜபாளையத்தில் உள்ள 42 வார்டுகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் 33 வார்டுகளில் தி.மு.க-வும், 3 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், 3 வார்டுகளில் அ.தி.மு.க-வும், 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
ராஜபாளையம் நகர்மன்ற வரலாற்றில் முதன் முறையாக தி.மு.க நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி திமுக கைப்பற்றுகிறது.
மொத்தமுள்ள 15 வார்டுகளில் 11-வார்டில் தி.மு.க, 3 வார்டுகளில் சுயேட்சை, ஒரு வார்டில் அ.தி.மு.க உறுப்பினர்கள் கைப்பற்றியுள்ளனர். ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 12 வார்டுகளை தி.மு.க-வும், 2 வார்டுகளில் அ.தி.மு.க-வும், இரண்டு வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தனித்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. சேத்தூர் பேரூராட்சியை தி.மு.க கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!