Tamilnadu
அசைக்கமுடியாத வெற்றியை பதிவு செய்து ராஜபாளையம் நகராட்சியை கைப்பற்றியது தி.மு.க.. முழு விபரம்!
விருதுநகர் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராஜபாளையத்தில் உள்ள 42 வார்டுகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் 33 வார்டுகளில் தி.மு.க-வும், 3 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், 3 வார்டுகளில் அ.தி.மு.க-வும், 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
ராஜபாளையம் நகர்மன்ற வரலாற்றில் முதன் முறையாக தி.மு.க நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி திமுக கைப்பற்றுகிறது.
மொத்தமுள்ள 15 வார்டுகளில் 11-வார்டில் தி.மு.க, 3 வார்டுகளில் சுயேட்சை, ஒரு வார்டில் அ.தி.மு.க உறுப்பினர்கள் கைப்பற்றியுள்ளனர். ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 12 வார்டுகளை தி.மு.க-வும், 2 வார்டுகளில் அ.தி.மு.க-வும், இரண்டு வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தனித்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. சேத்தூர் பேரூராட்சியை தி.மு.க கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!
-
தமிழ்நாட்டுக்கு வந்த பீகார் கல்வித்துறை அதிகாரிகள் : தமிழக கல்வி முறையை பீகாரில் அமல்படுத்த திட்டம் !
-
“பிரதமர் மோடியின் பேச்சு தரங்கெட்டு இருக்கிறது” - வைகோ கடும் விமர்சனம் !
-
சுயமரியாதைத் திருமண சட்டம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது- முன்னாள் நீதிபதி சந்துரு!