Tamilnadu
அசைக்கமுடியாத வெற்றியை பதிவு செய்து ராஜபாளையம் நகராட்சியை கைப்பற்றியது தி.மு.க.. முழு விபரம்!
விருதுநகர் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராஜபாளையத்தில் உள்ள 42 வார்டுகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் 33 வார்டுகளில் தி.மு.க-வும், 3 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், 3 வார்டுகளில் அ.தி.மு.க-வும், 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
ராஜபாளையம் நகர்மன்ற வரலாற்றில் முதன் முறையாக தி.மு.க நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி திமுக கைப்பற்றுகிறது.
மொத்தமுள்ள 15 வார்டுகளில் 11-வார்டில் தி.மு.க, 3 வார்டுகளில் சுயேட்சை, ஒரு வார்டில் அ.தி.மு.க உறுப்பினர்கள் கைப்பற்றியுள்ளனர். ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 12 வார்டுகளை தி.மு.க-வும், 2 வார்டுகளில் அ.தி.மு.க-வும், இரண்டு வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தனித்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. சேத்தூர் பேரூராட்சியை தி.மு.க கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!