Tamilnadu
வணிகர் சங்கங்களுடன் நிதியமைச்சர் PTR ஆலோசனை: மு.க.ஸ்டாலின் அரசின் முழு பட்ஜெட் தயாரிக்கும் பணி விறுவிறு!
2022-23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட் என்பதால் அதை தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தொழிற்சாலை மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கம் பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
இதில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் தியாகராஜன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தின் வாயிலாக கேட்கப்படும் கருத்துக்களின் அடிப்படையில் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான புதிய அறிவிப்புகள், வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!