Tamilnadu
தூக்கில் தொங்கிய தம்பதி... “இந்த காரணத்துக்காகவா விபரீத முடிவெடுத்தாங்க?” - சென்னையில் அதிர்ச்சி!
சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த கீழ்க்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மனைவி பாப்பா. மூத்த தம்பதிகளான இவர்களுக்குக் குழந்தை இல்லை. இதனால் இந்த தம்பதி பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நம்பிராஜனின் சகோதரர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், பல முறை முயற்சி செய்தும் நம்பிராஜன் தொலைபேசியை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.
பின்னர், ஜன்னல் வழியாக பார்த்தபோது இருவரும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவலை அடுத்து அங்கு வந்த போலிஸார் வீட்டின் கதவை உடைத்து இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தை இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!