Tamilnadu
‘Freefire’ விளையாட்டில் மூழ்கிய மகன்.. தாய் கண்டித்ததால் நடந்த விபரீதம் - ‘பகீர்’ சம்பவம்!
சென்னை, புழல் அருகே உள்ள கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மீனா. இவரது மகன் சுரேஷ். இவர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவன் சுரேஷ் வீட்டில் தினமும் செல்போனில் ப்ரீபயர் கேம் விளையாடி வந்துள்ளார். இதற்கு அவரது தாய் மீனா கண்டித்துள்ளார். ஆனால், தாயின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து கேம் விளையாடி வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மீனா மகனைக் கடுமையாக திட்டியுள்ளார். இதில், மன வருத்தமடைந்த சுரேஷ் வீட்டின் எதிரே இருந்த ஆளில்லாத வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பள்ளி மாணவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேம் விளையாடியதைக் கண்டித்தால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!