Tamilnadu
‘Freefire’ விளையாட்டில் மூழ்கிய மகன்.. தாய் கண்டித்ததால் நடந்த விபரீதம் - ‘பகீர்’ சம்பவம்!
சென்னை, புழல் அருகே உள்ள கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மீனா. இவரது மகன் சுரேஷ். இவர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவன் சுரேஷ் வீட்டில் தினமும் செல்போனில் ப்ரீபயர் கேம் விளையாடி வந்துள்ளார். இதற்கு அவரது தாய் மீனா கண்டித்துள்ளார். ஆனால், தாயின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து கேம் விளையாடி வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மீனா மகனைக் கடுமையாக திட்டியுள்ளார். இதில், மன வருத்தமடைந்த சுரேஷ் வீட்டின் எதிரே இருந்த ஆளில்லாத வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பள்ளி மாணவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேம் விளையாடியதைக் கண்டித்தால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!