Tamilnadu
‘Freefire’ விளையாட்டில் மூழ்கிய மகன்.. தாய் கண்டித்ததால் நடந்த விபரீதம் - ‘பகீர்’ சம்பவம்!
சென்னை, புழல் அருகே உள்ள கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மீனா. இவரது மகன் சுரேஷ். இவர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவன் சுரேஷ் வீட்டில் தினமும் செல்போனில் ப்ரீபயர் கேம் விளையாடி வந்துள்ளார். இதற்கு அவரது தாய் மீனா கண்டித்துள்ளார். ஆனால், தாயின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து கேம் விளையாடி வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மீனா மகனைக் கடுமையாக திட்டியுள்ளார். இதில், மன வருத்தமடைந்த சுரேஷ் வீட்டின் எதிரே இருந்த ஆளில்லாத வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பள்ளி மாணவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேம் விளையாடியதைக் கண்டித்தால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!