Tamilnadu
டிப்பர் லாரியில் நேருக்கு நேர் மோதிய கார்.. காதலர் தினத்தில் திருமணம் செய்த புது மாப்பிள்ளை பரிதாப பலி!
கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் பிரசாத். இவருக்குச் சுவாதி என்ற பெண்ணுடன் காதலர் தினத்தன்று திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் புதுமண தம்பதிகளுடன் சேர்ந்து சவுடையன், மஞ்சுளா ஆகிய நான்கு பேரும் காரில் பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பின்னர் சிட்கோ பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மீது கார் நேருக்கு நேராக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் முழுமையாக நொறுங்கியது. இதில் புதுமாப்பிள்ளை ஷியாம் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கடுகாயமடைந்த சுவாதி, சவுடையன், மஞ்சுளா ஆகிய மூன்று பேரை போலிஸார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!