Tamilnadu

டிப்பர் லாரியில் நேருக்கு நேர் மோதிய கார்.. காதலர் தினத்தில் திருமணம் செய்த புது மாப்பிள்ளை பரிதாப பலி!

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் பிரசாத். இவருக்குச் சுவாதி என்ற பெண்ணுடன் காதலர் தினத்தன்று திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் புதுமண தம்பதிகளுடன் சேர்ந்து சவுடையன், மஞ்சுளா ஆகிய நான்கு பேரும் காரில் பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பின்னர் சிட்கோ பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மீது கார் நேருக்கு நேராக மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் முழுமையாக நொறுங்கியது. இதில் புதுமாப்பிள்ளை ஷியாம் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கடுகாயமடைந்த சுவாதி, சவுடையன், மஞ்சுளா ஆகிய மூன்று பேரை போலிஸார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: போதையில் வந்த இளைஞர்கள்; பைக் மோதி விபத்து; 11 வயது சிறுமி பலி; சென்னையில் பரிதாபம்!