Tamilnadu
கடல் மார்க்கமாக கஞ்சா கடத்த திட்டம்: பண்டல் பண்டலாக சிக்கிய ரூ.2 கோடி கஞ்சா -தஞ்சை போலிஸார் அதிரடி ரெய்டு
விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழிக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து ஏ.டி.எஸ்.பி ஜெயசந்திரன் தலைமையிலான தனிப்படை போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி தஞ்சை சரக மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது திருச்சியிலிருந்து வந்த சரக்கு லாரி ஒன்றும் 3 காரும் வருவதையும் அறிந்து சோதனையிட்டிருக்கிறார்கள்.
அதில் இருந்த பண்டல் பண்டலாக கஞ்சா இருப்பதை அறிந்தவர்கள், வாகனங்களில் இருந்த 14 பேரையும் 2 கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்களிடம் விசாரித்ததில், ஆந்திராவை சேர்ந்த 3 பேர் மற்றும் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் என மொத்தம் 14 பேரையும் கைது செய்தனர்.
மேலும், விசாகப்பட்டினத்திலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட கஞ்சாவை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும், இதற்காக 3 குழுக்களாக பிரிந்து காரில் கஞ்சாவை எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து மிகப்பெரிய அளவிலான கஞ்சா கடத்தலை தஞ்சை போலிஸார் துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.
Also Read
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!