Tamilnadu
படு ஸ்பீடு..கார் ரேஸால் வந்த வினை: சூப்பர் மார்கெட்டில் புகுந்ததில் ஒருவர் படுகாயம்; அண்ணாநகரில் பரபரப்பு
சென்னை அண்ணா நகரின் பிரதான சாலையில் நேற்று இரவு மின்னல் வேகத்தில் 2 சொகுசு கார்களில் கார் ரேஸில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதில் ஒரு கார் எதிர்பாராதவிதமாக டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் சூப்பர் மார்க்கெட் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.
அப்போது மார்க்கெட் வெளியே இருந்த கடை ஊழியர் ஒசிம் என்பவர் படுகாயம் அடைந்தார். உடனே காரில் இருந்த 2 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றொரு காரில் சட்டென்று தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிஸார் விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான கார் என்றும் அந்த காரினை அவரது மகன் ராஜேஷ் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து ரேஸில் ஒட்டியதும் தெரியவந்துள்ளது.
எனவே தப்பியோடிய அனைவரையும் போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read
-
பாஜகவின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தும் Youtuber குறித்து அவதூறு பரப்பும் பாஜகவினர்... குவியும் கண்டனம் !
-
இங்கிலாந்து வாழ் இந்தியர்களாலும் வெறுக்கப்படும் மோடி!
-
இந்தியாவிற்கு அவப்பெயர் தேடி தந்த மோடி! : முதலீடு செய்ய தாமதிக்கும் Tesla!
-
ஆபாச வீடியோ விவகாரம் : பிரஜ்வல் ரேவண்ணா தப்பிக்க உதவியவர் யார்? மோடி மௌனத்தை குறிப்பிட்டு D.ராஜா கேள்வி!
-
பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !