Tamilnadu
படு ஸ்பீடு..கார் ரேஸால் வந்த வினை: சூப்பர் மார்கெட்டில் புகுந்ததில் ஒருவர் படுகாயம்; அண்ணாநகரில் பரபரப்பு
சென்னை அண்ணா நகரின் பிரதான சாலையில் நேற்று இரவு மின்னல் வேகத்தில் 2 சொகுசு கார்களில் கார் ரேஸில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதில் ஒரு கார் எதிர்பாராதவிதமாக டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் சூப்பர் மார்க்கெட் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.
அப்போது மார்க்கெட் வெளியே இருந்த கடை ஊழியர் ஒசிம் என்பவர் படுகாயம் அடைந்தார். உடனே காரில் இருந்த 2 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றொரு காரில் சட்டென்று தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிஸார் விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான கார் என்றும் அந்த காரினை அவரது மகன் ராஜேஷ் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து ரேஸில் ஒட்டியதும் தெரியவந்துள்ளது.
எனவே தப்பியோடிய அனைவரையும் போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read
-
”தோனி ஏன் மைதானத்திற்கு வருவதில்லை.. பயிற்சியாளர் மைக்கல் ஹசி சொன்ன காரணம்” : முழு விவரம் அறிக!
-
குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பயணிகள் பயணம் : ஒரே நாளில் இவ்வளவு பேரா?- மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!
-
”கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கை.. இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு”! - முழு விவரம்!
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!