Tamilnadu
“தவழ்ந்து சென்று முதல்வர் பதவிக்கு வந்த பழனிச்சாமிக்கு விவாதிக்க எந்த அருகதையும் இல்லை” : ஐ.லியோனி சாடல்!
வேலூர் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆகிய நகராட்சியின் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்திற்கு தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ. லியோனி கலந்துக்கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “இன்று எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வருக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர், மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்து இன்று முதல் அமைச்சராகி உள்ளார்.
ஆனால், எடப்பாடி பழனிச்சாமி மேசையின் கீழ் ஊர்ந்து சென்று சசிகலாவின் கால்களை பிடித்து முதல்வர் பதவியைப் பெற்றார். எடப்பாடி பழனிச்சாமி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினிடம் நேருக்கு நேர் மோத எந்த அருகதையும் கிடையாது. விரைவில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்மங்களை கண்டுபிடித்து வெளிப்படுத்த போவது தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்” என்று இக்கூட்டத்தில் உரையாற்றினார்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்