Tamilnadu
மட்டன் பிரியாணியில் வெந்து கிடந்த பல்லி.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் : பிரபல ஹோட்டலில் நடந்தது என்ன?
சென்னை புரசைவாக்கம் பகுதியில் பிரபலமான பிரியாணி கடை ஒன்று உள்ளது. இங்கு வந்த அப்பாஸ் என்ற இளைஞர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். பிரியாணியை சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து சர்வரிடம் கேட்டபோது அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை. இதனால் கடையிலிருந்த உரிமையாளரிடம் அப்பாஸ் கேட்டுள்ளார். இதற்கு அவர், இதைக்கூட பார்க்காமலா வேலை செய்வ என சர்வரை திட்டியுள்ளார். மேலும் இப்படி நடந்ததற்குக் கொஞ்சம் கூட பொறுப்பேற்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.
பல்லி கிடந்த பிரியாணியை சாப்பிட்டதால், அப்பாஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இதையடுத்து 'என் உயிருக்கு ஏதாவது ஆகிவிட்டால் சம்பந்தப்பட்ட உணவகம்தான் பொறுப்பு' என அபாஸ் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக, பிரியாணியில் பல்லி, புழு இருக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பிரியாணி பிரியர்களை பீதியடையச் செய்துள்ளது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!