Tamilnadu
மட்டன் பிரியாணியில் வெந்து கிடந்த பல்லி.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் : பிரபல ஹோட்டலில் நடந்தது என்ன?
சென்னை புரசைவாக்கம் பகுதியில் பிரபலமான பிரியாணி கடை ஒன்று உள்ளது. இங்கு வந்த அப்பாஸ் என்ற இளைஞர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். பிரியாணியை சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து சர்வரிடம் கேட்டபோது அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை. இதனால் கடையிலிருந்த உரிமையாளரிடம் அப்பாஸ் கேட்டுள்ளார். இதற்கு அவர், இதைக்கூட பார்க்காமலா வேலை செய்வ என சர்வரை திட்டியுள்ளார். மேலும் இப்படி நடந்ததற்குக் கொஞ்சம் கூட பொறுப்பேற்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.
பல்லி கிடந்த பிரியாணியை சாப்பிட்டதால், அப்பாஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இதையடுத்து 'என் உயிருக்கு ஏதாவது ஆகிவிட்டால் சம்பந்தப்பட்ட உணவகம்தான் பொறுப்பு' என அபாஸ் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக, பிரியாணியில் பல்லி, புழு இருக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பிரியாணி பிரியர்களை பீதியடையச் செய்துள்ளது.
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!