Tamilnadu
நண்பருடன் சேர்ந்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை.. போக்சோவில் கைது செய்த போலிஸ்!
விழுப்புரம் மாவட்டம் வி.சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.
அப்போது சிறுமி கர்ப்பமாக இருந்தை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து போலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலிஸார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
இதில், சிறுமியின் தந்தை கோவிந்தன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு தனது நண்பர் முனுசாமி என்பவருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தந்தை கோவிந்தன் அவரது நண்பர் முனுசாமி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தீபாவளி அன்று இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் : மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
-
RSS நிகழ்ச்சிகளுக்கு தடை? : தமிழ்நாட்டை பின்பற்ற தொடங்கிய கர்நாடகா - அமைச்சருக்கு மிரட்டல்!