Tamilnadu

சைக்கிளை திருடி தப்பிய இளைஞன்; நொந்துப்போய் போலிஸில் புகார்; சிறுவனுக்காக களத்தில் இறங்கிய துணை ஆணையர்!

சென்னை புரசைவாக்கம் ஹைரோடு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் சிறுவனின் சைக்கிளை ஒரு இளைஞர் திருடி ஒட்டிச் சென்றுள்ளார்.

அதனை கண்ட அந்த சிறுவன் தனது சைக்கிள் திருடப்பட்டு மர்ம நபர் ஒருவர் ஓட்டிச் சென்றதை கண்டு விரட்டிச் சென்றுள்ளான். எனினும் அந்த திருடன் சைக்கிளை ஓட்டிக் கொண்டு தப்பிச்சென்றுள்ளான்.

இதனையடுத்து தனது கண்ணெதிரே சைக்கிள் திருடப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் அச்சிறுவன் புகார் அளித்திருக்கிறான்.

இது குறித்து சென்னை கீழ்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயனுக்கு தெரியவர உடனடியாக சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டு சிறுவனிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சிறுவன் அளித்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது மட்டுமல்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட சைக்கிளை நேரடியாக சிறுவன் வீட்டிற்கே சென்று துணை ஆணையர் கார்த்திகேயன் ஒப்படைத்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தனது சைக்கிளை கண்டுபிடித்து கொடுத்ததற்காக அந்த சிறுவன் துணை ஆணையருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “சிறைப்பிடித்த இலங்கை கடற்படை.. தமிழக மீனவா்களை பத்திரமாக மீட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்” : பின்னணி என்ன?