Tamilnadu
விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் சில்மிஷம்.. ஆசாமியை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்!
தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த வடுகப்பட்டி பகுதியில் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்க வந்த ஒருவர் சிறுமிகளிடம் அத்துமீறியுள்ளார். இதனால் அவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து அங்கிருந்த கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர்.
இது பற்றி போலிஸாருக்க தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலிஸார் பொதுமக்களிடமிருந்து அந்த நபரை மீட்டு விசாரணை செய்தனர். இதில் அவர் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பது தெரியவந்தது.
பொதுமக்கள் அடித்ததில் அந்த நபருக்குக் காயம் ஏற்பட்டதை அடுத்து போலிஸார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரைப் பொதுமக்கள் கட்டிவைத்து அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!