Tamilnadu
தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொடூர கொலை .. 2 பேர் கைது: விசாரணையில் அதிர்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம், முத்தழகுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருள் விசுவாசம். வாலிபரான இவர் லோடுமேனா வேலைபார்த்து வந்தார். இவர் தனது பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ஸ்டீபன், குறசெபாஸ்டின் ஆகியோருடன் திண்டுக்கல் வடக்கு ரத வீதியில் மது குடித்துள்ளார்.
அப்போது இவர்கள் மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆரோக்கிய ஸ்டீபன், குறசெபாஸ்டியன் ஆகியோர் அங்கிருந்து பெரிய கல்லை எடுத்து அருள் விசுவாசத்தின் தலையில் போட்டுள்ளனர்.
இதில், அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் விசுவாசத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து ஆரோக்கிய ஸ்டீபன், குறசெபஸ்டின் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!
-
“வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் முப்பெரும் விழா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் : “தேர்தல் ஆணையத்தின் மிரட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு பயப்படாது” - முரசொலி!
-
நாளை நடைபெறவுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ? சென்னையில் எங்கு ? விவரம் உள்ளே !
-
திமுக முப்பெரும் விழா... கரூர் அழைக்கிறது வாரீர் : உடன்பிறப்புகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!