Tamilnadu
தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொடூர கொலை .. 2 பேர் கைது: விசாரணையில் அதிர்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம், முத்தழகுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருள் விசுவாசம். வாலிபரான இவர் லோடுமேனா வேலைபார்த்து வந்தார். இவர் தனது பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ஸ்டீபன், குறசெபாஸ்டின் ஆகியோருடன் திண்டுக்கல் வடக்கு ரத வீதியில் மது குடித்துள்ளார்.
அப்போது இவர்கள் மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆரோக்கிய ஸ்டீபன், குறசெபாஸ்டியன் ஆகியோர் அங்கிருந்து பெரிய கல்லை எடுத்து அருள் விசுவாசத்தின் தலையில் போட்டுள்ளனர்.
இதில், அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் விசுவாசத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து ஆரோக்கிய ஸ்டீபன், குறசெபஸ்டின் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தி.மு.க வெள்ளை அறிக்கை vs த.வெ.க வெள்ளை அறிக்கை : தி.மு.க IT WING விளக்கம்!
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!