Tamilnadu
தமிழக அமைச்சர் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கம்... நடுவானில் என்ன நடந்தது?
டெல்லி-சென்னை ஏர் இந்தியா விமானம் அமைச்சா் துரைமுருகனுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவருக்கு உடல்நலம் பாதித்ததால், விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறங்கியது. இதனால் விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்தது.
டெல்லியில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று காலை 9.40 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 85 பயணிகள் சென்னைக்கு பயணித்து கொண்டிருந்தனா்.
அந்த விமானம் வழக்கமாக பகல் 12.30 மணி அளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேரும். அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த ஒரு பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து விமானி உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவசரமாக நாக்பூா் விமானநிலையத்தில் விமானத்தை தரையிரக்கினாா். உடல்நலம் பாதிக்கப்பட்ட சென்னை பயணியை விமானத்திலிருந்நு அவசரமாக கீழே இறக்கி, நாக்பூா் விமான நிலைய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
அதன்பின்பு ஏா் இந்தியா விமானம் 84 பயணிகளுடன் நாக்பூரிலிருந்து பகல் 12.20 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்து சோ்ந்தது.
Also Read
-
11 ஆண்டுகள் ஆனபிறகும் வார்த்தைகளில் ‘வடை’ சுடும் மோடி : முரசொலி கடும் தாக்கு!
-
"தூய்மை தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிக்கை ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடு" - ஆதித்தமிழர் பேரவை !
-
முகவரி இல்லாதவர்களை வாக்காளர்களாக சேர்த்தது ஏன்? - தேர்தல் ஆணையர் விளக்கம் !
-
"அன்புமணி சோற்றுக்குள் பூசணிக்காயையே மறைத்திருக்கிறார்" - அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விமர்சனம் !
-
நாட்டிற்கே முன்னோடியான திட்டம்.. இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்.. தொடங்கி வைத்தார் முதல்வர்