Tamilnadu
அடகு கடை சுவரில் துளை போட்டு திருடிய மர்ம நபர்கள்.. மயிலாடுதுறை அருகே அதிர்ச்சி!
மயிலாடுதுறை அருகே அடகு கடையின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் நகை மற்றும் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் ஆலங்குடி கிராமத்தில், புதுபிடாகையை சேர்ந்த சதீஷ்குமார் (34) என்பவர் பைனான்ஸ் மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.
சதீஷ்குமார், நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை ஏழு மணிக்கு அவ்வழியே சென்றவர்கள் பைனான்ஸ் மற்றும் அடகு தலையின் பக்கவாட்டு சுவர் துளையிடப்பட்ட இருப்பதாக சதீஷ்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சதீஷ்குமார் வந்து பார்த்தபோது கடையின் பக்கவாட்டுச் சுவர் துளையிடப்பட்டு 2 சிசிடிவி கேமராக்கள், 5 கிராம் நகைகள் மற்றும் லேப்டாப், ரூ. 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுவரில் துளையிட்டு திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
-
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!