Tamilnadu
அடகு கடை சுவரில் துளை போட்டு திருடிய மர்ம நபர்கள்.. மயிலாடுதுறை அருகே அதிர்ச்சி!
மயிலாடுதுறை அருகே அடகு கடையின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் நகை மற்றும் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் ஆலங்குடி கிராமத்தில், புதுபிடாகையை சேர்ந்த சதீஷ்குமார் (34) என்பவர் பைனான்ஸ் மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.
சதீஷ்குமார், நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை ஏழு மணிக்கு அவ்வழியே சென்றவர்கள் பைனான்ஸ் மற்றும் அடகு தலையின் பக்கவாட்டு சுவர் துளையிடப்பட்ட இருப்பதாக சதீஷ்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சதீஷ்குமார் வந்து பார்த்தபோது கடையின் பக்கவாட்டுச் சுவர் துளையிடப்பட்டு 2 சிசிடிவி கேமராக்கள், 5 கிராம் நகைகள் மற்றும் லேப்டாப், ரூ. 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுவரில் துளையிட்டு திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!