Tamilnadu
திருமணமான 6 மாதத்தில் மனைவி தற்கொலை.. விபரீத முடிவெடுத்த கணவன் : நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம், குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகோவிந்தன். இவருக்குக் கும்பகோணத்தைச் சேர்ந்த கீர்த்திகா என்ற பெண்ணுடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து கணவர் வீட்டில் கீர்த்திக்காக வசித்து வந்தார். பின்னர் மூன்று மாதங்களுக்கு முன்பு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனைவி இல்லாமல் நான் மட்டும் எப்படி வாழ்வது என நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வேதனையுடன் கோவிந்தன் கூறிவந்ததுள்ளார்.
இதையடுத்து கடந்த வாரம் மனைவி புதைத்த இடத்திற்குச் சென்ற அவர் நானும் அவர் சென்ற இடத்திற்கே செல்லப்போகிறேன் என கூறி கதறி அழுதுள்ளார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் ஆறுதல் கூறி அவரை அங்கிருந்து வீட்டிற்குக் கூட்டிவந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவிலிருந்து அவர் காணவில்லை என்பதால் பல இடங்களில் நண்பர்கள் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, அதேபகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் விழுந்து அரிகோவிந்தன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !