Tamilnadu
சரக்கு தராததால் ஆத்திரம்.. இரவோடு இரவாக மதுக்கடைக்குத் தீவைத்த கும்பல்.. ஈரோட்டில் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம், தனிராவுத்தர் குளம் அருகே மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 22ம் தேதி இந்த கடைக்கு மர்ம நபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் பாட்டிலை வீசி கடைக்குத் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கடையிலிருந்த ரூ.44 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து நாசமாயின.
இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சங்கர் என்ற வாலிபரை போலிஸார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று கடை மூடும்போது, மதுபாட்டில் கேட்டதால் ஊழியர்கள் தரமறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்ததால் இரண்டு பேரும் சேர்ந்து இரவு கடைக்கு தீ வைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் சங்கரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். உடன் இருந்த மற்றொரு வாலிபரை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!