Tamilnadu
NeoCoV வைரஸ் தொற்றால் தமிழ்நாட்டிற்கு ஆபத்தா? : சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது என்ன?
சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முதலில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொற்று கடந்த 2 ஆண்டு காலமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் புதிதாக NeoCoV என்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இது வ்வாலிடம் கண்டுபிடிக்கப்பட்டாலும் மனிதர்களிடம் பரவும் தன்மை உள்ளதாகச் சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த வைரஸ் பரவினால் மூன்று பேரில் ஒருவர் உயிரிழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளன. இதனால் இந்த புதிய தொற்று குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் NeoCoV தொற்று குறித்து தேவையற்ற கருத்துக்களைப் பரப்ப வேண்டாம் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன்,"தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையை வெல்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். புதிய NeoCoV வைரஸ் வ்வாலிடம் இருந்து வ்வாலுக்கு பரவக்கூடியது. இதனால் இந்த தொற்று குறித்து தேவையற்ற கருத்துக்களைப் பரப்ப வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை நிறுத்தப்பட்டதா? - பதாஞ்சலி நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி !
-
மோடி விதவிதமாக அணியும் விலையுயர்ந்த கோர்ட், காலணிகளை வாங்கி தருவது யார் ? - ராகுல் காந்தி கேள்வி !
-
காசா மீதான இறுதிக்கட்ட தாக்குதலுக்கு தயாரான இஸ்ரேல் : ரஃபாவிலிருந்து வெளியேறிய 3 லட்சம் பாலஸ்தீனியர்கள் !
-
”இந்தியா கூட்டணி ஆட்சியில் இளைஞர்களின் கனவு நனவாகும்” : ராகுல்காந்தி உறுதி!
-
”காஷ்மீரில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படாதது ஏன்?” : ப.சிதம்பரம் கேள்வி!