Tamilnadu
சாலையை கடக்கும்போது நேர்ந்த சோகம்.. கணவன், மனைவி பரிதாப பலி : நடந்தது என்ன?
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் மீனாச்சாமி. இவரது மனைவி ஜெயக்கொடி. இந்த தம்பதியினர் உறவினர் ஒருவரின் இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
இவர்கள் வத்தலகுண்டு சாலையைக் கடந்து புறவழிச்சாலைக்கு வந்தனர். பின்னர் சாலையின் எதிர்ப்புறம் செல்லவேண்டும் என்பதால் சாலையை கடக்க முயன்றனர். அப்போது, பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவரது சடலத்தையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தரும் ‘ரெஸ்பெக்ட்’ உரிமைத்தொகை : சேலத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
”தொகுதி மறுவரையறை மசோதா.. வடக்கில் வென்று ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பு” : முரசொலி விமர்சனம்!