Tamilnadu
சாலையை கடக்கும்போது நேர்ந்த சோகம்.. கணவன், மனைவி பரிதாப பலி : நடந்தது என்ன?
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் மீனாச்சாமி. இவரது மனைவி ஜெயக்கொடி. இந்த தம்பதியினர் உறவினர் ஒருவரின் இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
இவர்கள் வத்தலகுண்டு சாலையைக் கடந்து புறவழிச்சாலைக்கு வந்தனர். பின்னர் சாலையின் எதிர்ப்புறம் செல்லவேண்டும் என்பதால் சாலையை கடக்க முயன்றனர். அப்போது, பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவரது சடலத்தையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”NEET தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது.” : தி இந்து நாளிதழில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
“கீழ்வெண்மணியும் கீழ்த்தரமான விமர்சனமும்” : ச.தமிழ்ச்செல்வனுக்கு முரசொலி பதிலடி!
-
பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
-
மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!