Tamilnadu
DPI-யில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர்.. கைது செய்த போலிஸ்.. நடந்தது என்ன?
சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் (DPI) உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். சந்தேகப்படும் படியாக இருந்ததால் அவரிடம் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த நபர் தனக்கு பள்ளிக்கல்வித்துறையில் வேலை கிடைத்துள்ளது எனக் கூறி பணி நியமன ஆணைகளைக் காண்பித்துள்ளார். அதைப் பார்க்கும்போது போலியானது என தெரிந்தது.
இதனால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
இதில், அவர் ராயப்பேட்டை பி.வி.கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரிந்தது. அவர் பள்ளிக்கல்வித் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடி செய்துள்ளார்.
மேலும் போலியாகப் பணி நியமன ஆணைகளையும் தயாரித்துக் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!