Tamilnadu
257 குற்ற வழக்குகளுக்கு உதவிய மோப்பநாய் உயிரிழப்பு.. மரியாதை செலுத்திப் பிரியாவிடை கொடுத்த போலிஸ்!
திருவள்ளூர் மாவட்டம், காவல்துறையின் துப்பறியும் பிரிவில் 2009ம் ஆண்டு பிறந்து 57 நாட்களே ஆன நாய்க்குட்டி ஒன்று பணியில் சேர்ந்தது. இதற்கு போலிஸார் ரேம்போ என பெயர் சூட்டினர்.
இதையடுத்து ரேம்போவுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. பின்னர் பல்வேறு குற்ற வழக்குகளை ரோம்போ கண்டறிந்தது. இப்படிக் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 257 குற்றச் சம்பவங்களில் மோப்பநாய் ரோம்போ உதவியுள்ளது.
சில நாட்களாக மோப்பநாய் ரேம்போ உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தநிலையில் உயிரிழந்தது. பின்னர் பல குற்ற வழக்குகளுக்கு உதவிய ரேம்போவுக்கு திருவள்ளூர் எஸ்.பி வருண்குமார் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் உரிய மரியாதையும் போலிஸார் மோப்பநாய் ரேம்போவுக்கு பிரியாவிடை கொடுத்தனர். இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்ட மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?