Tamilnadu
257 குற்ற வழக்குகளுக்கு உதவிய மோப்பநாய் உயிரிழப்பு.. மரியாதை செலுத்திப் பிரியாவிடை கொடுத்த போலிஸ்!
திருவள்ளூர் மாவட்டம், காவல்துறையின் துப்பறியும் பிரிவில் 2009ம் ஆண்டு பிறந்து 57 நாட்களே ஆன நாய்க்குட்டி ஒன்று பணியில் சேர்ந்தது. இதற்கு போலிஸார் ரேம்போ என பெயர் சூட்டினர்.
இதையடுத்து ரேம்போவுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. பின்னர் பல்வேறு குற்ற வழக்குகளை ரோம்போ கண்டறிந்தது. இப்படிக் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 257 குற்றச் சம்பவங்களில் மோப்பநாய் ரோம்போ உதவியுள்ளது.
சில நாட்களாக மோப்பநாய் ரேம்போ உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தநிலையில் உயிரிழந்தது. பின்னர் பல குற்ற வழக்குகளுக்கு உதவிய ரேம்போவுக்கு திருவள்ளூர் எஸ்.பி வருண்குமார் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் உரிய மரியாதையும் போலிஸார் மோப்பநாய் ரேம்போவுக்கு பிரியாவிடை கொடுத்தனர். இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்ட மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!