Tamilnadu
காதலை ஏற்காத காதலன் வீட்டார்.. சோகத்தில் விபரீத முடிவெடுத்த காதலி : நடந்தது என்ன?
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி மேரிபாத்திமா தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியம். இவரது மகள் மரிய கென்ஸ்லின். இவர் நகார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அரவது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் ஆசிரியர் மரிய கென்ஸ்லின் தனது உறவுக்கார இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த காதலுக்கு அந்த இளைஞனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சில நாட்களாகவே மரிய கென்ஸ்லின் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!