Tamilnadu
வெளிநாட்டு வேலை.. போலி விசா வழங்கி 51 லட்சம் மோசடி - பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப்பதிவு : நடந்தது என்ன?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் கேலக்ஸி டிராவல்ஸ் என்ற பெயரில் வெளிநாட்டு பணிகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனமும் நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கொத்தங்குடி வேப்பூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 98 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்வதற்காக தலா 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீதம் பணம் செலுத்தி உள்ளனர்.
3 மாதத்தில் அனைவரையும் சிங்கப்பூர் வேலைக்கு அனுப்புவதாகவும் இல்லையென்றால் பணத்தை திருப்பி அளிப்பதாகவும் ஒப்பந்தத்தை ஆனந்தராஜ் செய்துள்ளார். மேலும் போலியாக சிங்கப்பூரில் பணிபுரிவதற்கான விசாவையும் வழங்கி ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆறு மாதங்களாக வெளிநாட்டிற்கும் அனுப்பாமல் கட்டிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஆனந்தராஜ் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் தனி பேருந்தில் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் கொள்ளிடம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பா.ஜ.க கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போலி விசா வழங்கி 98 பேரிடம் 51 லட்சம் மோசடி செய்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!