Tamilnadu
குப்பைத் தொட்டியில் எரிந்த நிலையில் கிடந்த சடலம் : பதற வைக்கும் பரபரப்பு சம்பவம் - போலிஸ் தீவிர விசாரணை!
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பைப் போடுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சென்றபோது, அந்த குப்பைத் தொட்டியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருந்துள்ளது.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் எரிந்த நிலையிலிருந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் எரிந்த நிலையிலிருந்தது ஆண் ஒருவரின் சடலம் என்பதும், அவரை கடுமையாகத் தாக்கி கொலை செய்து பின்னர் எரித்துள்ளதாகவும் போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சடலமாக இருந்தவர் யார் என்பது குறித்தும், யார் இவரைக் கொலை செய்து குப்பைத் தொட்டியில் வீசி சென்றது என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!
-
SWAYAM செமஸ்டர் தேர்வு - அநீதியை உடனே சரிசெய்ய வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் MP கடிதம்!
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!