Tamilnadu
குப்பைத் தொட்டியில் எரிந்த நிலையில் கிடந்த சடலம் : பதற வைக்கும் பரபரப்பு சம்பவம் - போலிஸ் தீவிர விசாரணை!
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பைப் போடுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சென்றபோது, அந்த குப்பைத் தொட்டியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருந்துள்ளது.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் எரிந்த நிலையிலிருந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் எரிந்த நிலையிலிருந்தது ஆண் ஒருவரின் சடலம் என்பதும், அவரை கடுமையாகத் தாக்கி கொலை செய்து பின்னர் எரித்துள்ளதாகவும் போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சடலமாக இருந்தவர் யார் என்பது குறித்தும், யார் இவரைக் கொலை செய்து குப்பைத் தொட்டியில் வீசி சென்றது என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!