Tamilnadu

காணாமல் போன தங்கநகை.. மனமுடைந்து இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!

சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். இவரது மகள் அனுபிரீத்தி. இவருக்கு விழுப்புரத்தைச் சேர்ந்த அருள் பிரகாசம் என்பவருடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து இந்த தம்பதிக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனுபிரீத்தி சென்றுள்ளார்.

அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க நகை காணாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அனுபிரீத்தி கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டின் குளியலறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 'படிச்சது எல்லாம் மறந்துபோகுது'.. ஞாபக மறதியால் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு: நடந்தது என்ன?