Tamilnadu
“மேகக் கூட்டங்களுக்கு ஹெலிகாப்டர் நுழைந்தே விபத்துக்கு காரணம்?” : இந்திய விமானப்படை FIR-ல் சொல்வது என்ன?
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் உள்ள காப்பு காட்டில் கடந்த 8ஆம் தேதி காலை 12 மணியளவில் கடுமையான மேகமூட்டம் காரணமாக நாட்டின் முப்படை தளபதி பிபின் ராவுத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இதனையடுத்து ஹெலிகாப்டர் விபத்து குறித்து விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் மான் வேந்தர் சிங் தலைமையில் விமானப்படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முதற்கட்ட விசாரணை அறிக்கை விவரங்களை பாதுகாப்புத் துறை அமைச்சம் இன்று வெளியிட்டுள்ளது. அதில், எதிர்பாராத விமாக ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக மேகக் கூட்டங்களுக்கு ஹெலிகாப்டர் நுழைந்தே விபத்துக்கு காரணம் எனக் குறிப்பிடுள்ளது. முன்னதாக இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கிடம் தாக்கல் செய்யப்பட்டது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!