Tamilnadu
“15 ஆண்டுகளாக நடக்க முடியாத சோகம்.. மாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த திருத்துறைப்பூண்டி SP” : நடந்தது என்ன?
திருவாளூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். விவசாயக் கூலித் தொழிலாளியான தியாகராஜனுக்கு ஹரிஹரன் என்ற மாற்றுத்திறனாளி மகன் ஒருவர் உள்ளார்.
15 வயதாகும் ஹரிகரனுக்கு மூன்று சக்கர வாகனம் வாங்க முடியாத சூழல் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ளார். இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் ரோந்துப் பணிக்குச் சென்றுள்ளார்.
அப்போது ஹரிஹரனின் நிலை காவல்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரத்திற்கு தெரியவந்துள்ளது. இதனிடையே அவருக்கு உதவ முன்வந்து மூன்று சக்கர கைக்கிள் ஒன்றை வாங்கிக்கொடுக்க முன் வந்துள்ளார். இதனையறிந்த கொடையுள்ளம் கொண்ட சிலர் அவருக்கு உதவி செய்யதுள்ளனர்.
இதனிடையே சிறுவன் ஹரிஹரனுக்கு பொங்கல் பரிசாக மூன்று சக்கர சைக்கிள் ஒன்றை வாங்கிக்கொடுத்துள்ளனர். தனது சொந்த ஊரியில் பல இடங்களில் நேரில் பார்த்திடாத ஹரிகரன், அப்பகுதில் சைக்கிளில் உலா வந்தார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
மேலும் மூன்று சக்கர சைக்கிள் வாங்கிக் கொடுத்த காவல்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரத்திற்கு, ஹரிஹரன் மற்றும் தாய்-தந்தை தங்களின் நன்றியைத் தெரிவித்தனர். மேலும் காவலரின் இத்தகைய நடவடிக்கைக்கு பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!