Tamilnadu
தமிழ்நாட்டுக்கு வந்த ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை... முதல்வர் அளித்த மனுவில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்!
பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியிருந்து நேற்று காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஒன்றிய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் முன்னிலையில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுக்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான அனுமதி முறையை மாற்றி அமைத்தல்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தை விரைவாக அமைத்தல்.
மேலும் புதிய 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கோரிக்கை.
கோயம்புத்தூரில் ஒரு புதிய எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ கோரிக்கை.
மாநில அரசு நிதி மூலம் நிறுவப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை முற்றிலும் நீக்குதல்.
மருத்துவ உயர் படிப்புகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க கோரிக்கை.
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி பெற விண்ணப்பித்துள்ள மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் பயின்ற மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சிக்கான எண்ணிக்கை இடங்களை அதிகரிக்க கோரிக்கை.
தேசிய நல வாழ்வு திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை.
மருத்துவ உயர் படிப்பில் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசின் எதிர்ப்பினை தெரிவித்தல்.
புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ள 19 மாவட்டங்களில் மாவட்ட தலைமை மருத்துவமனை புதிதாக உருவாக்கிட நிதி ஒதுக்கீடு வழங்க கோரிக்கை.
Also Read
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !