Tamilnadu
காதலி தற்கொலை செய்துகொண்டதால் சோகத்தில் காதலனும் தூக்கிட்டு தற்கொலை : நடந்தது என்ன?
ராணிப்பேட்டை மாவட்டம், வேலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து, கதிர்வேல் தனது காதலியின் பெற்றோரிடம் தங்கள் மகளைத் திருமணம் செய்து தரும்படி கூறியுள்ளார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனையடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்துகொண்டார்.
பின்னர், காதலியின் இறப்புச் செய்தியைக் கேட்ட கதிர்வேலும் மலையடிவாரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவரது சடலத்தையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து இருவரின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை ஏற்காததால் காதலர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!