Tamilnadu
கிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுமிகள் பரிதாப பலி.. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி திலகவதி. இந்த தம்பதிக்கு ஹேமாவதி, கலையரசி ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். வெங்கடேசனின் உறவினர் மகள் சுபாஷினி.
இந்த மூன்று சிறுமிகளும் திலகவதியுடன் சேர்ந்து நெல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அருகே இருந்த குட்டை கிணற்றில் மூன்று பேரும் குளிக்கச் சென்றனர். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திலகவதி கிராம மக்களிடம் கூறினார்.உடேன போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் மூன்று சிறுமிகளையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு, சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று சிறுமிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
-
உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!