Tamilnadu
“இதாங்க என்னை கடிச்சது..” : டப்பாவில் அடைத்து பாம்பை மருத்துவமனைக்கு எடுத்து வந்த நபரால் பரபரப்பு!
நாமக்கல் மாவட்டம், மல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை 4 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, உடனே தன்னைக் கடித்த பாம்பைப் பிடித்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்துள்ளார். பின்னர் அந்த டப்பாவை கையோடு எடுத்துக்கொண்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இதைப் பார்த்த மருத்துவர்களும், செவிலியர்களும் அச்சமடைந்தனர். மேலும் இந்தப் பாம்புதான் தன்னை கடித்தது என ராஜா மருத்துவர்களிடம் கூறியுள்ளார். பிறகு அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
விஷத்திற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும் என்பதற்காகவே தன்னைக் கடித்த பாம்பையும் கையோடு பிடித்து அவர் கொண்டுவந்தது தெரியவந்தது. கடித்த பாம்பை கையோடு பிடித்துக்கொண்டு சிகிச்சைக்கு வந்ததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
மீண்டும் ‘வந்தே மாதரம்’ முதலில்... தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளிய தவெக அரசு : குவியும் கண்டனம்!
-
“பட்டாவுக்கே ரூ.5 ஆயிரம் வாங்குகிறோம்... ரூ.50 ஆயிரம் கொடுங்கள்!” – மணல் வியாபாரியிடம் பேரம் பேசிய விஏஓ!
-
“கவுன்சிலர் சீட் முதல் அரசு பதவி வரை கமிஷன் தர வேண்டும்” : த.வெ.க நிர்வாகி மீது பரபரப்பு குற்றச்சாட்டு!
-
”ஹலோ சி.எம்.சார்… உங்களது தூய ஆட்சியில் ரத்தக் குவியல்கள்.. தினந்தோறும் பதற்றம்..!” - முரசொலி விமர்சனம்!
-
அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த த.வெ.க மருத்துவ அணி நிர்வாகி : வலுக்கும் கண்டனங்கள்!