Tamilnadu
ஊரடங்கு கட்டுப்பாடுகளை சைக்கிளில் சென்று ஆய்வு செய்த கலெக்டர்.. பொதுமக்கள் பாராட்டு!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால், கடைகள் முழுவதும் மூடப்பட்டன. மேலும் வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் ஊரடங்குகளைப் பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்கிறார்களா என்பதை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சாலையில் முகக்கவஸாம் அணியாமல் நின்று கொண்டிருந்தவர்களை அழைத்து, முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரக்கூடாது என அறிவுரை வழங்கினார். மேலும் அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார்.
எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி தனியாக 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு மாவட்ட ஆட்சியர் சைக்கிளில் சென்று ஆய்வு செய்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து அவருக்குப் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் சைக்கிளில் ஆய்வு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!