Tamilnadu
லாரி மீது மோதிய டூவீலர்.. ஒரே நேரத்தில் தந்தையும் 2 வயது மகனும் பலி - சோகத்தில் கிராம மக்கள்!
இந்நிலையில் , பையூரில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுவிட்டு மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தனர்.
பின்னர், இவர்கள் வாகனம் பையூர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது நிலைதடுமாறி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில் பெரியசாமியும் அவரது இரண்டு வயது மகன் மிதுனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரோகிணி படுகாயமடைந்தார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயமடைந்த ரோகிணியைக் கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் தந்தையும் , மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!