Tamilnadu
திடீரென விளைநிலத்தில் வந்திறங்கிய ஹெலிகாப்டர்; பரபரப்பான கடம்பூர் - சத்தியமங்கலம் அருகே நடந்தது என்ன?
பெங்களூருவில் இருந்து கேரளாவின் கொச்சி நகருக்கு பாரத்-ஷீலா என்ற தம்பதி மருத்துவ சிகிச்சைக்காக தனியார் ஹெலிகாப்டர் மூலம் சென்றுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜன.,08) காலை 10.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை நெருங்கும் போது வானில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் என்ற கிராமத்தில் உள்ள விளை நிலையத்தில் அவசர அவசரமாக ஹெலிகாப்டரை தரையிறக்கியிருக்கிறார்கள்.
திடீரென ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் அவ்விடத்தை நோக்கி கிராம மக்கள் படையெடுத்து வந்தால் அத்தியூர் விளைநிலப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் போலிஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கணவன் மனைவியான பாரத்-ஷீலா பயணித்த ஹெலிகாப்டரில் பொறியாளராஅ அங்கித் சிங் மற்றும் கேப்டன் ஜஸ்பால் இருந்ததாகவும், மோசமான வானிலை காரணமாகவே ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிற்பகல் 2.15 மணியளவில் வானிலை சீரானதும் ஹெலிகாப்டர் கொச்சினை நோக்கி புறப்பட்டது. இதனிடையே கடம்பூரில் இருந்து தாழ்வாக பறந்து வந்து அத்தியூரில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவத்தை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்திருக்கிறார்கள்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!