Tamilnadu
திடீரென விளைநிலத்தில் வந்திறங்கிய ஹெலிகாப்டர்; பரபரப்பான கடம்பூர் - சத்தியமங்கலம் அருகே நடந்தது என்ன?
பெங்களூருவில் இருந்து கேரளாவின் கொச்சி நகருக்கு பாரத்-ஷீலா என்ற தம்பதி மருத்துவ சிகிச்சைக்காக தனியார் ஹெலிகாப்டர் மூலம் சென்றுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜன.,08) காலை 10.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை நெருங்கும் போது வானில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் என்ற கிராமத்தில் உள்ள விளை நிலையத்தில் அவசர அவசரமாக ஹெலிகாப்டரை தரையிறக்கியிருக்கிறார்கள்.
திடீரென ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் அவ்விடத்தை நோக்கி கிராம மக்கள் படையெடுத்து வந்தால் அத்தியூர் விளைநிலப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் போலிஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கணவன் மனைவியான பாரத்-ஷீலா பயணித்த ஹெலிகாப்டரில் பொறியாளராஅ அங்கித் சிங் மற்றும் கேப்டன் ஜஸ்பால் இருந்ததாகவும், மோசமான வானிலை காரணமாகவே ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிற்பகல் 2.15 மணியளவில் வானிலை சீரானதும் ஹெலிகாப்டர் கொச்சினை நோக்கி புறப்பட்டது. இதனிடையே கடம்பூரில் இருந்து தாழ்வாக பறந்து வந்து அத்தியூரில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவத்தை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்திருக்கிறார்கள்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!