Tamilnadu
ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களிடம் கைவரிசை.. 11 செல்போன்களை திருடிய டெலிவரி பாய் கைது : சிக்கியது எப்படி?
சென்னை கொடுங்கையூர் பகுதியில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை மேலாளராக ஞானசேகர் என்பவர் உள்ளார்.
இந்நிலையில், பொதுமக்கள் ஆர்டர் செய்திருந்த செல்போன்கள் இன்னும் வரவில்லை என புகார் வந்துள்ளது. இதையடுத்து ஞானசேகர் இது குறித்து விசாரணை செய்தபோது ஆர்டர் செய்திருந்த 11 செல்போன்கள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அந்த நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்த திமேஷ் என்ற வாலிபர்தான் செல்போன்கள் திருடியதை போலிஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை பிடித்து போலிஸார் விசாரணை நடத்திய போது, செல்போன்களை திருடியதை ஒத்துக் கொண்டதை அடுத்து அவரை போலிஸார் கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!