Tamilnadu
ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களிடம் கைவரிசை.. 11 செல்போன்களை திருடிய டெலிவரி பாய் கைது : சிக்கியது எப்படி?
சென்னை கொடுங்கையூர் பகுதியில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை மேலாளராக ஞானசேகர் என்பவர் உள்ளார்.
இந்நிலையில், பொதுமக்கள் ஆர்டர் செய்திருந்த செல்போன்கள் இன்னும் வரவில்லை என புகார் வந்துள்ளது. இதையடுத்து ஞானசேகர் இது குறித்து விசாரணை செய்தபோது ஆர்டர் செய்திருந்த 11 செல்போன்கள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அந்த நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்த திமேஷ் என்ற வாலிபர்தான் செல்போன்கள் திருடியதை போலிஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை பிடித்து போலிஸார் விசாரணை நடத்திய போது, செல்போன்களை திருடியதை ஒத்துக் கொண்டதை அடுத்து அவரை போலிஸார் கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!