Tamilnadu
ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களிடம் கைவரிசை.. 11 செல்போன்களை திருடிய டெலிவரி பாய் கைது : சிக்கியது எப்படி?
சென்னை கொடுங்கையூர் பகுதியில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை மேலாளராக ஞானசேகர் என்பவர் உள்ளார்.
இந்நிலையில், பொதுமக்கள் ஆர்டர் செய்திருந்த செல்போன்கள் இன்னும் வரவில்லை என புகார் வந்துள்ளது. இதையடுத்து ஞானசேகர் இது குறித்து விசாரணை செய்தபோது ஆர்டர் செய்திருந்த 11 செல்போன்கள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அந்த நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்த திமேஷ் என்ற வாலிபர்தான் செல்போன்கள் திருடியதை போலிஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை பிடித்து போலிஸார் விசாரணை நடத்திய போது, செல்போன்களை திருடியதை ஒத்துக் கொண்டதை அடுத்து அவரை போலிஸார் கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!