Tamilnadu
காதல் கணவனுடன் ஏற்பட்ட சண்டை.. விபரீத முடிவெடுத்த காதலி: நடந்தது என்ன?
கன்னியாகுமரி மாவட்டம், மறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லிசா. இவர் விஷ்ணு என்ற வாலிபரைக் காதலித்து மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மார்த்தாண்டம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் மனைவி லிசாவிற்கு சமைக்கத் தெரியாததால் விஷ்ணு அவரிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 30ம் தேதி லீசா உடலில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்து வீட்டார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த லிசா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து கணவன் விஷ்ணுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. இளம் பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!