Tamilnadu
நடுவீதியில் சீருடையை கழட்டிவிட்டு மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. புதுச்சேரியில் அவலம் - பின்னணி என்ன?
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளி மாணவர்கள், பத்துக்கும் மேற்பட்டோர் முத்தியால்பேட்டை மாரியம்மன் கோவில் வீதியில் ஒருவருக்கு ஒருவரை தாக்கிக் கொள்ளும் வீடியோ தற்போது அனைத்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பள்ளி சீருடையுடன் மாணவர்கள் இரு மாணவரை மாறி மாறி தாக்குவதும், அதனை அங்கிருந்தவர்கள் ஏன் தாக்குகிறார்கள் என்று கேள்வி எழுப்புவதும், இதில் பதிவாகி உள்ளது. பள்ளி சீருடையுடன் சிறிது நேரம், ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் மாணவர்கள், உடனடியாக அங்கிருந்து கிளம்புங்கள் என்று ஒரு மாணவன் கூறுவதும், வீடியோ எடுப்பவர் எதுக்கு அண்ணா வீடியோ எடுக்கிறர்கள் என்று கேள்வி கேட்பதும் இதில் பதிவாகி உள்ளது.
காவல்துறைக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் , அவ்வாறு புகார் வந்தால் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை மாநகர முத்தியால்பேட்டை போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!