Tamilnadu
5 வருடமாக மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. 4 பேர் கைது: போலிஸுக்கு கிடைத்த ரகசிய தகவல் -சிக்கியது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா, இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சலூன் மற்றும் ஸ்பா நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாகத் திருவள்ளூர் தாலுகா போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அதிரடியாகச் சோதனை செய்தனர்.
அப்போது, இந்த மசாஜ் சென்டரில் போலிஸ் தொழில் நடந்து வருவதை போலிஸார் உறுதி செய்தனர். இதனையடுத்து கடையின் உரிமையாளர் சரண்யா, அபிராமி (33), ரபிக் (25) இஸ்ரா அலி (21) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.
கடந்த ஐந்து வருடமாக மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெற்று வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!