Tamilnadu
5 வருடமாக மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. 4 பேர் கைது: போலிஸுக்கு கிடைத்த ரகசிய தகவல் -சிக்கியது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா, இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சலூன் மற்றும் ஸ்பா நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாகத் திருவள்ளூர் தாலுகா போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அதிரடியாகச் சோதனை செய்தனர்.
அப்போது, இந்த மசாஜ் சென்டரில் போலிஸ் தொழில் நடந்து வருவதை போலிஸார் உறுதி செய்தனர். இதனையடுத்து கடையின் உரிமையாளர் சரண்யா, அபிராமி (33), ரபிக் (25) இஸ்ரா அலி (21) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.
கடந்த ஐந்து வருடமாக மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெற்று வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
-
“சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குட் பேட் அக்லி - இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை : உயர்நீதிமன்ற உத்தரவு!
-
பா.ஜ.கவில் இருந்து விலகிய முக்கிய தலைவர் : புதுச்சேரி அரசியல் வட்டத்தில் பரபரப்பு!